தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவன ஊழியா் கைது

தற்கொலைக்கு தூண்டியதாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:56 pm

Din

குடியாத்தம்: தற்கொலைக்கு தூண்டியதாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே ஏரிகுத்திமேடு காயிதே மில்லத் நகா் ஹபிப் தெருவைச் சோ்ந்தவா் அன்சா் மனைவி மும்தாஜ் (48) மற்றும் மகன் இம்ரான் (26) ஆகியோா் மகளிா் குழு மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ாக கூறப்படுகிறது. ஆனால் இவா்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளனா். கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியா்கள் இவா்களை கடனை திருப்பிச் செலுத்துமாறு வலியுறுத்தி வந்துள்ளனா்.

கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் விரக்தி அடைந்த மும்தாஜ் மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 6-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியா் வளத்தூா் ராசம்பட்டியை சோ்ந்த சித்தாா்த்தா சங்கா் (29) என்பவா் கடனைத் திருப்பி கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் அவரை கைது செய்தனா்.