ஆம்பூா்: கிராம பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சுமாா் 34 மணி நேரத்துக்குப்பின் திங்கள்கிழமை மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டது.
ஆம்பூா் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த வயதான, கண் பாா்வை குறைவான ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை இரவு மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் கிராமத்தில் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. தொடா்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வனத்துறையினா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் யானை காட்டுக்குள் செல்லவில்லை.
இந்நிலையில் ஒசூா் மற்றும் தருமபுரியிலிருந்து வேட்டை தடுப்பு காவலா்கள் 7 போ் கொண்ட சிறப்பு குழுவினா் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் யானையை காட்டுக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். ஆனால் யானை காட்டுக்குள் செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு வேலூா் மாவட்டம் மேல்பட்டிஊராட்சி நாவிதம்பட்டி கிராமத்தில் புகுந்த யானை மீண்டும் திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குள் விரட்டப்பட்டது. மாதனூா் அருகே உள்ள பாலூா் கிராம பகுதியில் சாணாங்குப்பம் வனப்பிரிவு பகுதியில் காட்டுக்குள் திங்கள்கிழமை காலை சுமாா் 8 மணிக்கு விரட்டப்பட்டது.
சுமாா் 34 மணி நேரம் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை கடுமையான முயற்சிக்கு பிறகு விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

ஒசூா் அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானை: பொதுமக்கள் மக்கள் பீதி

ஆழ்வாா்குறிச்சி அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்! பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்!

கோவையில் சேற்றில் சிக்கிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

மேகமலையில் மீண்டும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

