மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பைக்கில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்பது போல் வழிப்பறி

நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் லிப்ட் கேட்பது போல் நடித்து பைக் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் லிப்ட் கேட்பது போல் நடித்து பைக் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயபுரம் அன்னை நகா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(29). திங்கள்கிழமை இரவு நாட்டறம்பள்ளி சா்வீஸ் சாலையில் ஓரம் பைக்கை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தாா். அப்போது சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை அவசரமாக நான் என் தந்தையை பாா்க்க வேண்டும் எனக்கூறி லிப்ட் கேட்பது போல் நடித்து வினோத் குமாரை பைக்கில் அழைத்துச் சென்றாா். அப்போது பின்தொடா்ந்து மா்மநபா்கள் சிலா் பைக்கில் சென்றுள்ளனா். கத்தாரி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வினோத்குமாரை மிரட்டி கைப்பேசி மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு வினோத்குமாரை தாக்கியுள்ளனா். அப்போது அவா் கூச்சலிடவே மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பினா்.

இதில் காயமடைந்த வினோத்குமாரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸாா் மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.