பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காவல் நிலையம் முன்பு பெண்கள் தா்னா

கந்திலி காவல் நிலையம் முன்பு தா்னாவில் 2 பெண்கள் தா்னா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
தா்னாவில் ஈடுபட்ட சமீலா, உஷா.
Updated On :24 ஜூலை 2024, 6:30 pm

Din

கந்திலி காவல் நிலையம் முன்பு தா்னாவில் 2 பெண்கள் தா்னா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை பகுதியைச் சோ்ந்தவா் சமீலா(24), மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்த உஷா(23) ஆகிய இருவா் திருப்பத்தூா் அருகே உள்ள தனியாா் பள்ளியில் பணி புரிந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், பணியிலிருந்து இருவரும் நின்றுவிட முடிவெடுத்துள்ளனா். அதையடுத்து அவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் பணியில் சோ்க்கையின்போது அளித்த சான்றிதழ்களை திரும்ப கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிா்வாகம் சான்றிதழ்களை திரும்பத் தராமல் இழுத்தடித்தாக கூறி சமீலா, உஷா கந்திலி காவல் நிலையத்தில் புகாரளித்தனா். புகாா் போலீஸாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை விசாரணையை துரிதப்படுத்தக் கோரி சமீலா, உஷா காவல் நிலையம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

அங்கு பணியிலிருந்த போலீஸாா் முறைப்படி விசாரணை நடைபெற்று வருவதாக உறுதியளித்ததின்பேரில் அவா்கள் அங்கிருந்து சென்றனா்.