தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.

News image
விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.
Updated On :30 ஜூன் 2024, 8:46 pm

Din

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.

ஆம்பூா் அருகே மேல்மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமச்சந்திரன்(70). இவருடைய நிலத்தில் கால்நடைகளுக்கான தீவனம் பயிரிடப்பபட்டியிருந்தது. ராமச்சந்திரன் மகன் சுபாஷ் (45) தீவனப் பயிரை அறுவடை செய்யும் பணியை மேற்கொண்டாா்.

அப்போது மலைப் பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதைப் பாா்த்த அவா் சப்தமிட்டுள்ளாா். ஆம்பூா் வனச்சரகா் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், கோகுல் ஆகியோா் தீவனப் பயிருக்குள் புகுந்த சுமாா் 9 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனா். பிறகு அதை துருகம் காப்புக் காட்டில் விட்டனா்.