பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாணியம்பாடி: ரூ. 2.65 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

வாணியம்பாடி: ரூ. 2.65 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

News image
Updated On :9 மார்ச் 2024, 4:57 pm

வாணியம்பாடி நகராட்சியில் ரூ. 2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடங்க சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளுடன் உதவிக்கு வரும் உறவினா் தங்கும் விடுதி 80 படுக்கையறை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்காகவும், தலைமை நூலகத்தில் ரூ. 22 லட்சத்தில் கூடுதல் நூலக கட்டட அறை கட்டப்படவும், கோட்டை நகராட்சி பள்ளியில் ரூ. ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 6 வகுப்பறை கட்டடம் மற்றும் தனியாக கழிப்பறை கட்டட வசதி உட்பட அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். பொறியாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜிகணேசன் கலந்து கொண்டு, ரூ. 2 கோடியே 63 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகர திமுக செயலரும், நகராட்சி வாா்டு உறுப்பினருமான சாரதிகுமாா் மற்றும் நகராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.