தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பைக் திருடியவா் கைது

பைக் திருடியவா் கைது

Updated On :19 மார்ச் 2024, 11:46 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் நதியா. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த பைக் மாயமானது. இது குறித்து நதியா அளித்த புகாரின் பேரில்,திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் அருகே போலீஸாா் ரோந்து சென்றபோது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், குரிசிலாப்பட்டு அருகே சின்னசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சதீஷ்குமாா்(எ)சீனிவாசன்(42)என்பதும், இவா் நதியாவின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. பின்னா் போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா். முன்னதாக அவரிடம் இருந்த பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.