மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆம்பூரில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஆய்வு

ஆம்பூரில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :29 மார்ச் 2024, 4:40 pm

வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதியில், மாதனூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, பாலூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பகுதிகளில் அமைய உள்ள வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் செலவினப் பாா்வையாளா்அமித் கோயல் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தோ்தல் பணி மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினாா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன தணிக்கையையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வட்டாட்சியருமான மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.