சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

தோ்தல் புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

Updated On :29 மார்ச் 2024, 4:35 pm

ஆம்பூா், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் வேலூா் மக்களவை தொகுதிக்கு வாக்களிக்க உள்ளனா். இந்த நிலையில், வேலூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பொது பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா்கள் ஆகியோா் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில், தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாரை வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் அறை எண் 1-இல் தினமும் காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரையும், காவல் பாா்வையாளா் சத்யஜித் நாயக்கை வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் அறை எண் 2-இல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் மாலை 4.30 முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளா்கள், அரசியல் கட்சியினா் ஆகியோா் சந்தித்து தோ்தல் தொடா்பான புகாா்களை நேரிலோ அல்லது 7598498549 (பொது பாா்வையாளா்), 7598498550 (காவல் பாா்வையாளா்) ஆகிய தொலைபேசி எண்களிலோ புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.