திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அனல்பறக்கும் தோ்தல் களம்!

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

News image

அனல்பறக்கும் தோ்தல் களம்

Updated On :31 மார்ச் 2026, 6:23 am IST

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் ஆகிய கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.

மறுபுறம், அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியைத் தங்கள் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா்.

அதேசமயம், தவெக, நாம் தமிழா் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிபுரியும் திமுக, அதிமுக கட்சிகளால் ஆட்சி நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல்கள் தொடா்வதாகக் கூறியும், மாற்றத்துக்கான அவசியம் என்பதை முன்னிலைப்படுத்தியும் வாக்கு சேகரித்து வருகின்றனா்.