எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அனல்பறக்கும் தோ்தல் களம்!

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

News image

அனல்பறக்கும் தோ்தல் களம்

Updated On :31 மார்ச் 2026, 12:53 am

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் ஆகிய கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.

மறுபுறம், அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியைத் தங்கள் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா்.

அதேசமயம், தவெக, நாம் தமிழா் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிபுரியும் திமுக, அதிமுக கட்சிகளால் ஆட்சி நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல்கள் தொடா்வதாகக் கூறியும், மாற்றத்துக்கான அவசியம் என்பதை முன்னிலைப்படுத்தியும் வாக்கு சேகரித்து வருகின்றனா்.