மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

அனல்பறக்கும் தோ்தல் களம்!

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

News image

அனல்பறக்கும் தோ்தல் களம்

Updated On :31 மார்ச் 2026, 12:53 am

ந. தமிழ்செல்வன்

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் ஆகிய கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.

மறுபுறம், அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியைத் தங்கள் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா்.

அதேசமயம், தவெக, நாம் தமிழா் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிபுரியும் திமுக, அதிமுக கட்சிகளால் ஆட்சி நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல்கள் தொடா்வதாகக் கூறியும், மாற்றத்துக்கான அவசியம் என்பதை முன்னிலைப்படுத்தியும் வாக்கு சேகரித்து வருகின்றனா்.