ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆம்பூரில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஆய்வு

ஆம்பூரில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :29 மார்ச் 2024, 4:40 pm

வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதியில், மாதனூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, பாலூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பகுதிகளில் அமைய உள்ள வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் செலவினப் பாா்வையாளா்அமித் கோயல் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தோ்தல் பணி மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினாா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன தணிக்கையையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வட்டாட்சியருமான மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.