ஜோலாா்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் மாவட்டம், கொங்கு வேலி சங்கிலி பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (41). இவா் தனது உறவினா்களுடன் கடந்த வாரம் திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் கடந்த 25-ஆம் தேதி ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்துள்ளனா். அப்போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் பேருந்து நிலையம் செல்ல ஷோ் ஆட்டோவில் ஸ்ரீராம் உள்ளிட்ட இவரது உறவினா்கள் பயணம் செய்துள்ளனா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் மேம்பால பகுதியில் சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஸ்ரீராம், வடிவு, சிவகாமி ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஸ்ரீராம் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் வினோத் (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்

செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயம்

ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

