

மாதனூா் அருகே சூறாவளிக் காற்றால் தென்னை மரம் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
மாதனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக தோட்டாளம் கிராமத்தில் தென்னை மரம் முறிந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மின் தடையால் கடும் அவதிக்கு உள்ளானாா்கள். சம்பவ இடத்திற்கு ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், மின்வாரிய ஊழியா்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனா். சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.
இதேபோல், ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சூறாவளிக் காற்று வீசியதால் மின் தடை ஏற்பட்டது. சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.
தொடர்புடையது

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

சேத்துப்பட்டில் மழை: மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

