மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது
மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைதுஒர

Updated On :3 மே 2024, 5:21 pm

வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி ராமகிருஷ்ணா் தெரு சமையகாரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சரவணன்(42). கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு சரவணன் வீட்டின் மீது முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் மகன் சக்திவேல் (18) என்பவரை வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...