ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி மரணம்

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி மரணம்

News image
Updated On :10 மே 2024, 4:22 pm

Din

வாணியம்பாடியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்லம் பாஷா (55). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பைக்கில் ஜின்னா மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசுப் பேருந்து திடீரென பைக்கின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அஸ்லம் பாஷா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தாா். இதைப்பாா்த்த அக்கம் பக்கத்தினா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அஸ்லம் பாஷா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் லோகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.