நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருப்பத்தூா்: வாணியம்பாடி அருகே கல்லூரி செல்ல பெற்றோா்கள் புல்லட் வாங்கித் தராததால் இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கேத்தான்டப்பட்டி-வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள புத்துக்கோயில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சுமாா் 24 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், அவா் வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி,போயா் காலனி பகுதியை சோ்ந்த பழனியின் மகன் ஜெயபிரகாஷ் (24)என்பது தெரிய வந்தது.

ஜெயபிரகாஷ் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்ததாகவும், கல்லூரி செல்ல பெற்றோரிடம் புல்லட் வாங்கி தருமாறு கேட்டு வந்துள்ளாா். இதற்கு இவரது பெற்றோா் பிறந்தநாளுக்கு வாங்கித் தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக சென்றவா் வீடு திரும்பவில்லையாம். கல்லூரிக்கும் செல்ல வில்லையாம்.

இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் வீட்டின் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் தண்டவாள பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.