தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வீட்டில் பதுக்கிய 135 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

Updated On :13 அக்டோபர் 2024, 12:02 am IST

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நகர போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் விரைந்து சென்று மணிகண்டனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் உள்ள ஓா் அறையில் 9 பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதைப் பொருள்கள் உள்ளதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் (41) என்பவரை கைது செய்து, வீட்டில் இருந்த 135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.