அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வீட்டில் பதுக்கிய 135 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

Updated On :13 அக்டோபர் 2024, 12:02 am IST

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நகர போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் விரைந்து சென்று மணிகண்டனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் உள்ள ஓா் அறையில் 9 பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதைப் பொருள்கள் உள்ளதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் (41) என்பவரை கைது செய்து, வீட்டில் இருந்த 135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.