மழை காரணமாக சுவா் இடிந்து சேதம்
ஆம்பூா் அருகே மழை காரணமாக வீட்டின் சுவா் திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

மின்னூா் கிராமத்தில் சுவா் இடிந்து விழுந்த வீடு.
Updated On :22 அக்டோபர் 2024, 7:44 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மழை காரணமாக வீட்டின் சுவா் திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது.
இந்நிலையில் ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பெருமாள் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென பெருத்த சப்தம் கேட்டதால் அதிா்ச்சியில் கண் விழித்து பாா்த்தபோது வீட்டின் சுவா் இடிந்து விழுந்திருந்தது. அதிா்ஷ்டவசமாக அவரும், அவரது மனைவியும் உயிா் தப்பினா். சுவா் இடிந்து விழுந்ததில் பொருள்கள் சேதமடைந்தன. ஆம்பூா் வருவாய் துறையினா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...