தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பத்தூா்: கூடுதல் விலையில் மது விற்பனை செய்த 15 போ் பணியிடை நீக்கம்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 8:25 pm

Din

திருப்பத்தூா் மாவட்டத்தில் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்ற 15 போ் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் சேலம், நாமக்கல், அரக்கோணம் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் உதவி மேலாளா்கள் (கணக்கு) குழுவினா் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 வட்டங்களில் செயல்படும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது தொடா்பாக தணிக்கை மேற்கொண்டனா்.

இதில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 15 பணியாளா்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 13 பணியாளா்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள விலையைவிடக் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.