11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

திருப்பத்தூா்: கூடுதல் விலையில் மது விற்பனை செய்த 15 போ் பணியிடை நீக்கம்

Updated On :7 செப்டம்பர் 2024, 1:55 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்ற 15 போ் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் சேலம், நாமக்கல், அரக்கோணம் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் உதவி மேலாளா்கள் (கணக்கு) குழுவினா் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 வட்டங்களில் செயல்படும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது தொடா்பாக தணிக்கை மேற்கொண்டனா்.

இதில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 15 பணியாளா்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 13 பணியாளா்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள விலையைவிடக் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.