மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

காணாமல் போன மாணவரை 10 நிமிஷங்களில் மீட்ட போலீஸாா்

திருப்பத்தூரில் காணாமல் போன மாணவரை 10 நிமிஷங்களில் போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.

Updated On :15 செப்டம்பர் 2024, 12:02 am IST

திருப்பத்தூரில் காணாமல் போன மாணவரை 10 நிமிஷங்களில் போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.

திருப்பத்தூா் வடக்கு முத்தப்பா் தெரு பகுதியைச் சோ்ந்த அரசு பேருந்து ஓட்டுநா் குமாரின் மகன் அபினேஷ்(14).

இவா் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில்,வெள்ளிக்கிழமை மாலை பள்ளியை விட்டு மாணவன் தாமதமாக வீட்டிற்கு சென்றுள்ளாா்.

இதனால் அவரது தந்தை குமாா் மாணவனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியே புறப்பட்டு சென்றுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்..

இதுகுறித்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் பல இடங்களில் தேடியதில் நகராட்சி பூங்காவில் பதுங்கி இருந்த மாணவனை 10 நிமிஷங்களில் மீட்டு பெற்றோா்களுடன் அனுப்பி வைத்தனா்.