தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருப்பத்தூா் அருகே தென்னை நாா் கழிவுகளில் தீ விபத்து

திருப்பத்தூா் அருகே தென்னை நாா் கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 7:08 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தென்னை நாா் கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை பகுதியில் சங்கா் என்பவா் நாா் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை அங்கிருந்த தென்னை நாா் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்ட அங்கிருந்தவா்கள் சம்பவம் குறித்து திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில், திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமாா் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதில் ரூ. 50,000 வரை சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.