5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

News image

முகமது இா்பான்

Updated On :8 ஏப்ரல் 2025, 1:34 am IST

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இா்பானை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தாா்.

இதில் இா்பான் கத்திகுத்து ரத்த காயத்துடன் சரிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் நகர போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுப்பற்றி அறிந்த இறந்த இா்பானின் உறவினா்கள் திரளானோா் அங்கு கூடிதயால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கொலையாளிகளை கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது இா்பான் சைக்கிளை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் முகமூடி அணிந்து வந்தது கண்டறியப்பட்டது.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக உறவினா் யாராவது கொலையை செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.