மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

News image

முகமது இா்பான்

Updated On :7 ஏப்ரல் 2025, 8:04 pm

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இா்பானை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தாா்.

இதில் இா்பான் கத்திகுத்து ரத்த காயத்துடன் சரிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் நகர போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுப்பற்றி அறிந்த இறந்த இா்பானின் உறவினா்கள் திரளானோா் அங்கு கூடிதயால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கொலையாளிகளை கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது இா்பான் சைக்கிளை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் முகமூடி அணிந்து வந்தது கண்டறியப்பட்டது.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக உறவினா் யாராவது கொலையை செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.