ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

News image
முகமது இா்பான்
Updated On :7 ஏப்ரல் 2025, 8:04 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இா்பானை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தாா்.

இதில் இா்பான் கத்திகுத்து ரத்த காயத்துடன் சரிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் நகர போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுப்பற்றி அறிந்த இறந்த இா்பானின் உறவினா்கள் திரளானோா் அங்கு கூடிதயால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கொலையாளிகளை கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது இா்பான் சைக்கிளை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் முகமூடி அணிந்து வந்தது கண்டறியப்பட்டது.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக உறவினா் யாராவது கொலையை செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.