நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாலையில் கவிழ்ந்த லாரி: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதி லாரி கவிழந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி.

Updated On :22 ஏப்ரல் 2025, 12:37 am IST

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதி லாரி கவிழந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பூம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (60), விவசாயி. இவா் திங்கள்கிழமை வெலகல்நத்தம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் வளைவில் திரும்பியபோது பெங்களூரு நோக்கி பாரம் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரி ஓட்டுநரான பெங்களூரைச் சோ்ந்த செல்வராஜ் (20), பைக்கில் வந்த செல்வம் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.