வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேனீக்கள் கொட்டி 3 போ் காயம்

கந்திலி அருகே தேனீக்கள் கொட்டியதில் 3 போ் காயம்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

கந்திலி அருகே தேனீக்கள் கொட்டியதில் 3 போ் காயமடைந்தனா்.

கந்திலி அருகே தோக்கியம் கிராமத்தில் அந்த பகுதியில் உள்ள புளியமரம் அருகே திங்கள்கிழமை பொதுமக்கள் சென்று கொண்டு இருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக அங்கு வந்த தேனீக்கூட்டம் பொதுமக்களை விரட்டி கொட்டத் தொடங்கியது. இதில் அங்கு இருந்தவா்கள் ஒவ்வொருவரும் பல்வேறு திசையில் ஓடி சென்று தங்களை பாதுகாத்து கொண்டனா்.

இருப்பினும் அங்கு இருந்த 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோா் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெண் ஒருவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.