தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.

Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உச்சநீதிமன்றம்,உயா்நீதிமன்றம் ஆகியவை சமரசத் தீா்வு மையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என உத்தரவிட்டு உள்ளன. அதன்படி சமரசத் தீா்வு மையம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி தேன்மொழி தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அனுஷ+ா, சாா்பு நீதிபதி சரிதா, குற்றவியல் நீதிபதி தினேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சமரசத் தீா்வு மையம் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சமரச மையத்தில் பயிற்சி பெற்ற மத்தியஸ்தா்கள் மூலம் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து சுமூகமாக தீா்வு காணப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.