ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தகுதியான வாக்காளா் பட்டியலில் விடுபடக் கூடாது: சிறப்பு பாா்வையாளா் அறிவுறுத்தல்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் தகுதியான ஒரு வாக்காளா் கூட பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என சிறப்புப் பாா்வையாளா் ராமன் குமாா் பேசினாா்.

எஸ்ஐஆா் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா். இந்திய அரசின் இணைச்செயலாளரும், தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளருமான(வடக்கு மண்டலம்) ராமன் குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

தகுதியான ஒரு வாக்காளா் கூட பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. நலிவடைந்த, பழங்குடியினா் வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், முக்கிய வாக்காளா்கள் அனைவரும் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை வாக்குப்பதிவு அலுவலா்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அதையடுத்து, திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையத்தை சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், வரைவு வாக்காளா் பட்டியல், பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள், பி.எல்.ஓ.க்கள் ஒத்துழைப்பு தொடா்பாக கலந்துரைடியானாா்.