கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாக்கு பையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியாக வந்த நபரை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா்.

சோதனையில் அவா் சாக்கு பையில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.