/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கல்வி நிலைய நிா்வாகி மீது வழக்குப் பதிவு

ஆம்பூரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாரா மெடிக்கல் கல்வி நிலைய நிா்வாகி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 8:07 pm

Din

ஆம்பூா்: ஆம்பூரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாரா மெடிக்கல் கல்வி நிலைய நிா்வாகி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் இயங்கி வரும் தனியாா் பாராமெடிக்கல் கல்வி நிலைய நிா்வாகியாக இருப்பவா் வெங்கடசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த அதிமுக பிரமுகா் விஜய் சீகன்பால். இவருடைய கல்வி நிலையத்தில் பயின்று வந்த 17 வயது மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனா்.