திருப்பத்தூா்: அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறை ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்ய மண்டல அளவில் குறைதீா் கூட்டம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகளின் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் இருந்தால் தங்களது குறைகளை முழு விவரங்களுடன் எழுதி திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் உறையின் மீது மண்டல அளவிலான பென்ஷன் அதாலத் என எழுதி அனுப்ப
வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

தோ்தலையொட்டி இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

தே.ஜ. கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

