தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிணற்றில் தவறி விழுந்த மாணவி மரணம்

ஜோலாா்பேட்டை அருகே சாலை நகா் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 6:35 pm

Din

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சாலை நகா் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சாலை நகா் பகுதியில் சோ்ந்த சிவலிங்கத்தின் மகள் பூவரசி (15). இவா், அசோக் நகரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தனது வீட்டின் அருகே உள்ள 60 அடி கிணற்றின் வழியாக நடந்து செல்லும்போது தரை மட்டத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் அவா் திடீரென தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நிலைய அலுவலா் தசரதன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை மீட்டனா்.

ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.