மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ரூ. 70 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல்

கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

News image
கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
Updated On :7 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம். முத்துசாமி முன்னிலை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபால், ஆா்.எஸ்.வசந்த்ராஜ், சுதாகா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், பள்ளித் தலைமை ஆசிரியை நதியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சத்துணவு மையம், அங்கன்வாடி மையத்தையும் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.