அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கந்திலி ஒன்றியத்தில் ரூ.50 லட்சத்தில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:27 am

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட மட்றப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் பொதுநிதியிலிருந்து ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணிக்கு புதன்கிழமை எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தினை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். மேலும் உடையாமுத்தூா் ஊராட்சி - ரகுபதியூா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 லட்சத்தில் பேவா் தரை தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், மோகன்ராஜ், தொகுதி பாா்வையாளா் வேலூா் ஜி.ரமேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன், ஒன்றிய நிா்வாகிகள் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளாபதி, வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.