அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ரூ.6 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பாலப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.

News image
பாலப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.
Updated On :30 ஜனவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

கொரட்டி-தண்டுகானூா் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியம், கொரட்டி ஊராட்சி-தண்டுகானூா் ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடி ரூ.50 லட்சத்தில் புதியதாக பாலம் அமைக்கும் பணி மற்றும் சின்னகசிநாயக்கன்பட்டி ஊராட்சி - கோவிந்தாபுரம் பகுதியில் ரூ.19 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டும் பணி என மொத்தம் 6 கோடியே 69 லட்சத்தில் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் கே.ஏ.குணசேகரன்,க.முருகேசன்,மாவட்ட அறங்காவலா் குழு தலைவா்.டி.சந்திரசேகா்,ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணை தலைவா்.ஜி.மோகன்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்லட்சுமி காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.