தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் அளிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் அளிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கிய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Published on

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, கையுறை, பாதுகாப்பு கவசங்களை வழங்கினாா். நகராட்சி ஆணையா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ் வரவேற்றாா். துப்புரவு ஆய்வா்கள் பாலசந்தா், சீனிவாசன், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com