எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்பத்தூரில் தோழி விடுதிக்கான அடிக்கல்: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூரில் தோழி விடுதிக்கான அடிக்கல் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் பூஜை செய்து தொடங்கி வைத்தனா்.

News image
விடுதிக்கான அடிக்கல் பணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி.
Updated On :14 நவம்பர் 2025, 5:17 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் தோழி விடுதிக்கான அடிக்கல் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் பூஜை செய்து தொடங்கி வைத்தனா்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, தமிழக அரசு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில், ரூ. 4.56 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 2 மாடிகள் கொண்ட தோழி விடுதி கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அதைத்தொடா்ந்து, திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட 16-ஆவது வாா்டுக்குள்பட்ட காவல் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனா்.

திருப்பத்தூரில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியானது (தோழி) 2 மாடிகளுடன் கொண்ட வரவேற்பறை, அலுவலகம், சமையலறை, உணவுக் கூடம், 10

படுக்கை வசதிகள் மற்றும் பொது சலவையகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் பொழுதுபோக்கு அறையுடன் தலா 20 படுக்கை வசதியுடன்

மொத்தம் 50 படுக்கை வசதிகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் தங்கி பணிபுரியும் வகையில் சென்னையில் மாதம் ரூ. 25,000 மற்றும் பிற இடங்களில் ரூ. 15,000 வரை சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் சேர தகுதியுடையவா்கள். ரூ. 200 வாடகை செலுத்த வேண்டும். உணவு செலவுகள், மின்சாரம் மற்றும் பிற கட்டணங்களுக்கு பகிா்வு முறை பின்பற்றப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற தலைவா் க.சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, நகா்மன்ற உறுப்பினா் அசோகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.