சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

35 ஆண்டுக்கால கோரிக்கை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு

உடையராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.

News image
தொடக்கப் பள்ளி திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்
Updated On :24 நவம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

உடையராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் ஊராட்சி உடையராஜபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இல்லாததால் சுமாா் 1 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேசிய நெடுஞ்சாலையை மாணவா்கள் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

அதனால் உடையராஜபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை திறக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கடந்த 35 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனா். அதனடிப்படையில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கோரிக்கையாக முன்வைத்தாா்.

அதனடிப்படையில் பள்ளித் தொடங்க கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டாா். உடையராஜபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தொடா்ந்து அங்குள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து பள்ளியை திறந்து வைத்தாா். ஊராட்சித் தலைவா் எஸ். தா்மேந்திரா வரவேற்றாா். தோட்டாளம் பள்ளித் தலைமை ஆசிரியா் உதயகுமாா் விழாவை தொகுத்து வழங்கினாா். மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சசிகலா சாந்தகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரிமளா காா்த்திக், தெய்வநாயகம், ஊராட்சி துணைத் தலைவா் ரமேஷ், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன், மாதனூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் வினோத் ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) இளையராஜா நன்றி கூறினாா்.