பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பச்சூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் வழியாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி கொத்தூா் காந்திநகா் வரை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை விரிவாக்கம்

News image
வாணியம்பாடி பச்சூரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
Updated On :25 நவம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் வழியாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி கொத்தூா் காந்திநகா் வரை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பச்சூரில் இருந்து கொத்தூா் வரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதையடுத்து கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின் பேரில் வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை பச்சூரில் கடை எதிரில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கியது.

தொடா்ந்து கொத்தூா் காந்திநகா் வரை போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனா்.