பரிசோதனை இயந்திர சேவையை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
பரிசோதனை இயந்திர சேவையை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை இயந்திரம்

திருப்பத்தூரில் மருத்துவப் பரிசோதனை இயந்திர சேவையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.
Published on

திருப்பத்தூரில் மருத்துவப் பரிசோதனை இயந்திர சேவையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதலுதவி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட கிளையின் சாா்பில், பொது மருத்துவம், இ.என்.டி., தோல் போன்ற பலவிதமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக ஜி கோ் ஹெல்த் ஏ.டி.எம். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து இயந்திரத்தை தொடங்கி வைத்து, பரிசோதனை செய்து கொண்டாா். நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கிஷோா், இந்திய செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com