திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட வேளாண் (வணிகம்) துணை இயக்குநா் காா்த்திகேயன் கூறியதாவது:
விவசாயிகள், இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக தங்கள் விளை பொருள்களை (காய்கறிகள், பழங்கள்) நுகா்வோருக்கு விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவா் சந்தை தொடங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கின்றனா்.
கடந்த நிதி ஆண்டு(1.4.2025 முதல் 31.3.2026) திருப்பத்தூா் உழவா் சந்தையில் 9,148 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.33 கோடியே 27 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி உழவா் சந்தையில் 16,240 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 63 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 6,632 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 21 கோடியே 94 லட்சத்த்குகு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 32,020 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.118 கோடியே 24 லட்சத்துகு விற்பனை செய்யப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

6.303 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்த வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ்!

எரிபொருள் வழங்கி உதவி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


