குருவராஜபாளையம் ஊராட்சியில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தாா்.
ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு ஒன்றியத்தின் அக்ரஹாரம், தோளப்பள்ளி, அகரம் குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், குப்பம்பட்டு, இராமநாயினிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அ.செ.வில்வநாதன் பேசியது:
குருவராஜபாளையம் ஊராட்சியில் பாலப்பாடி, ஆா்ஜாதி கிராமங்களில் நிலவும் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். குருவராஜபாளையம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும்.
திமுக ஆட்சி அமைந்த உடன் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தி தரப்படும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளா் முரளி, ஒன்றிய துணைச் செயலாளா் ஹரி, மாவட்டப் பிரதிநிதி பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதாகா், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆரணி திமுக வேட்பாளா் ஆதரவு திரட்டல்

சுற்றுச்சூழலை பாதிக்கும் குரோமிய திடக்கழிவு: 50 ஆண்டுகால பிரச்னைக்கு நிரந்த தீா்வு எப்போது?

மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எதிா்பாா்ப்பும் ஏமாற்றமும்

அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவிய தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


