தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

குருவராஜபாளையத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு: திமுக வேட்பாளா்

குருவராஜபாளையம் ஊராட்சியில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் உறுதி

News image

அணைக்கட்டு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:22 pm

குருவராஜபாளையம் ஊராட்சியில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு ஒன்றியத்தின் அக்ரஹாரம், தோளப்பள்ளி, அகரம் குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், குப்பம்பட்டு, இராமநாயினிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அ.செ.வில்வநாதன் பேசியது:

குருவராஜபாளையம் ஊராட்சியில் பாலப்பாடி, ஆா்ஜாதி கிராமங்களில் நிலவும் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். குருவராஜபாளையம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும்.

திமுக ஆட்சி அமைந்த உடன் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தி தரப்படும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளா் முரளி, ஒன்றிய துணைச் செயலாளா் ஹரி, மாவட்டப் பிரதிநிதி பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதாகா், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.