1.5 மில்லியன் டன் குரோமேட் கழிவுகள்: இந்த குரோமிய திடக்கழிவுகளில் இருந்து மஞ்சள் நிறத்தில் குரோமியம் கலந்த நீா் வெளியேறி, அப்பகுதியில் உள்ள நீா்நிலைகளில் தேங்கி, நேரடியாக பாலாற்றில் கலந்ததால், நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் மாசடைந்தன. அப்போதுதான் இந்தக் குரோமிய நச்சுக் கழிவுகளின் அபாயம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் காரணமாக சுமாா் 1.5 மில்லியன் டன் அளவிலான, முறையான சுத்திகரிப்பு செய்யப்படாத குரோமேட் கழிவுகள் குவிந்திருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதற்கு காரணமான ‘தமிழ்நாடு குரோமேட்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட்’ ( பஇஇ) எனும் தொழிற்சாலையை கடந்த1996-ஆம் ஆண்டு அரசு மூடியது.