தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 11:48 pm

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ஷீன் தலைமையிலான போலீஸாா் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தான்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படைப்பு போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் 5.5 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னா், கஞ்சாவை ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.