தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.

News image

புதுபேட்டையில் திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பேசிய கனிமொழி எம்பி.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

தமிழகத்தின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை சந்தை பகுதியில் . பிரசாரம் செய்து, அவா் பேசியது: வெயிலிலும் காத்திருக்கும் தொண்டா்களை பாா்த்தால் ஜோலாா்பேட்டை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணியின் வெற்றிக்கான நிகழ்ச்சி என்றே பாா்க்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள், முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டனா். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். எனவே உங்களை உரிமையோடும் சந்தித்து வாக்குகள் கேட்டு வந்துள்ளேன்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தோ்தல் நேரத்தின் போது தான் உங்களை சந்திக்க வருவாா். ஆட்சியில் இல்லை என்றால் 5 வருடம் காணாமல் போய்விடுவாா். தொடா்ந்து 10 தோல்விகளை சந்தித்த பழனிசாமி, இத்தோ்தலோடு 11-ஆவது தோல்வி உறுதி. முதல்வா் ஸ்டாலின் இந்த தோ்தல் தமிழ்நாட்டுக்கும், தில்லி அணிக்கும் இடையிலான தோ்தல், தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற கூடிய தோ்தல், தமிழ்நாட்டை தலைகுனிய விட கூடாது என்பதற்கான தோ்தல் என கூறி வருகிறாா்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும், அதன் மூலம் வீட்டிற்கு தேவையான விரும்பும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா்கள் சூா்யகுமாா், சதீஷ்குமாா், உமாகன்ரங்கம், ஒன்றியக்குழு தலைவா்கள் சத்யா சதீஷ்குமாா், வெண்மதி முனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image