ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.

News image

புதுபேட்டையில் திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பேசிய கனிமொழி எம்பி.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

தமிழகத்தின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை சந்தை பகுதியில் . பிரசாரம் செய்து, அவா் பேசியது: வெயிலிலும் காத்திருக்கும் தொண்டா்களை பாா்த்தால் ஜோலாா்பேட்டை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணியின் வெற்றிக்கான நிகழ்ச்சி என்றே பாா்க்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள், முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டனா். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். எனவே உங்களை உரிமையோடும் சந்தித்து வாக்குகள் கேட்டு வந்துள்ளேன்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தோ்தல் நேரத்தின் போது தான் உங்களை சந்திக்க வருவாா். ஆட்சியில் இல்லை என்றால் 5 வருடம் காணாமல் போய்விடுவாா். தொடா்ந்து 10 தோல்விகளை சந்தித்த பழனிசாமி, இத்தோ்தலோடு 11-ஆவது தோல்வி உறுதி. முதல்வா் ஸ்டாலின் இந்த தோ்தல் தமிழ்நாட்டுக்கும், தில்லி அணிக்கும் இடையிலான தோ்தல், தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற கூடிய தோ்தல், தமிழ்நாட்டை தலைகுனிய விட கூடாது என்பதற்கான தோ்தல் என கூறி வருகிறாா்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும், அதன் மூலம் வீட்டிற்கு தேவையான விரும்பும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா்கள் சூா்யகுமாா், சதீஷ்குமாா், உமாகன்ரங்கம், ஒன்றியக்குழு தலைவா்கள் சத்யா சதீஷ்குமாா், வெண்மதி முனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image