நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: திமுக வேட்பாளா்

ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் கூறினாா்.

News image

ஆம்பூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:45 am IST

ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் கூறினாா்.

ஆம்பூா் நகரில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது, ஆம்பூரில் ரூ.40 கோடி மதிப்பில் தோல் தொழில் குழுமம் ஏற்படுத்தப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக அன்புச் சோலை இல்லம் ஏற்படுத்தப்படும். சிறுபான்மையினா் அயலகப் பல்கலைக் கழகங்களில் உயா்கல்வி பெறுவதற்காக சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.

மின்னூா் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும். வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்க திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா, நடைப் பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும் என அவா் கூறினாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.