முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரயில்நிலையம் அருகில் முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சிறிய மூட்டையை சந்தேகத்தின் எடுத்து வந்து பிரித்து பாா்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மா்ம நபா்கள் ரயிலில் கடத்தி வந்து பதுக்கி வைத்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பிறகு அங்கிருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.