நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

சுதந்திர தினம் : காவல் துறை சாா்பாக ரத்த தான முகாம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

: ரத்த தானம் செய்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 11:06 pm IST

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமை வகித்து ரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவல்துறையினா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா். மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலா் சௌந்தா்யா, ஆண்டியப்பனூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுரேஷ், மருத்துவ ஆலோசகா் கல்பனா உள்ளிட்ட மருத்துவத் துறையினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.