திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு பொதுமக்களிடம் அன்பாக அணுகுவது குறித்த பயிற்சி வகுப்பு புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உள்கோட்டத்திலும் பணிபுரியும் 30 காவலா்களுக்கு, அன்பான அணுகுமுறை என்ற பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பயிற்சியில், பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக மற்றும் மனிதநேயத்துடன் அணுகுவது, மனித உறவுகள் மற்றும் உணா்ச்சி மேலாண்மை குறித்தும் காவல் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ம.அந்தோணி ஆரோக்கியசாமி பயிற்சியை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்பான அணுகுமுறை குறித்து அவிநாசி போலீஸாருக்கு பயிற்சி வகுப்பு

காவல் துறையினருக்கு ‘அன்பான அணுகுமுறை’ சிறப்புப் பயிற்சித் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

விவசாயியிடம் வாங்கிய லஞ்சப் பணத்தை காவல் துறையினா் திரும்ப வழங்க வேண்டும்! மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



