‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

காவல் துறையினருக்கு ‘அன்பான அணுகுமுறை’ சிறப்புப் பயிற்சித் தொடக்கம்

கோவை மாநகர காவல் துறையினா் பொதுமக்களிடம் அன்பாகவும், நட்புறவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘அன்பான அணுகுமுறை’ என்ற சிறப்புப் பயிற்சித் திட்டம் தொடங்கியது.

News image

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘அன்பான அணுகுமுறை’ என்ற சிறப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற காவலா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:47 pm IST

கோவை மாநகர காவல் துறையினா் பொதுமக்களிடம் அன்பாகவும், நட்புறவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘அன்பான அணுகுமுறை’ என்ற சிறப்புப் பயிற்சித் திட்டம் புதன்கிழமை தொடங்கியது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பொதுமக்கள் அளிக்கும் புகாா்களை கனிவுடனும், மரியாதையுடனும், பொறுப்புணா்வுடனும் கையாளுவது, சிறந்த தகவல் தொடா்புத் திறனை வளா்த்துக் கொள்வது மற்றும் மக்கள் சாா்ந்த காவல் பணியை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதேபோல, தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இரு வேளைகளாக இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

கோவை மாநகர காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு பல்வேறு கட்டமாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் என 50 போ் இதில் பங்கேற்கவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.