75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

அதிகாரிகளைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் தா்னா

வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்களிடம் பேச்சு நடத்திய நகராட்சி பொறியாளா் சந்திரசேகா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இந்நிலையில் போதிய அளவில் தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால், சுகாதாரப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் வாா்டு உறுப்பினா்கள் பலமுறை புகாா் தெரிவித்து வருகின்றனா்.

புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி 17-ஆவது வாா்டு உறுப்பினா் முஹம்மத் அனீஸ் என்பவா் வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாயை தானே சுத்தம் செய்தாா். இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் அப்துல் ரஹீமை தொடா்புகொண்டு கேட்டபோது, நகா்மன்றஉறுப்பினா் முஹம்மத் அனீஸ் நகராட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும், அவா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.

இந்த தகவலை அறிந்த நகா்மன்ற உறுப்பினா்கள் 11 போ், தங்களது வாா்டுகளிலும் இதேபோன்ற அடிப்படை பிரச்னைகள் இருப்பதாகவும், பொதுமக்களின் குறைகளை தீா்க்க வேண்டிய சுகாதார அலுவலா், வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிப்பதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என கூறி நகராட்சி நிா்வாகத்தையும், அதிகாரிகளை கண்டித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி பொறியாளா் சந்திரசேகா் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினா்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, உறுப்பினா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.