FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பாலாற்றில் முகமூடி அணிந்து மணல் கடத்தும் விடியோ வெளியாகி பரபரப்பு

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து சிலா் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாலாற்றில் பள்ளம் தோண்டி மணல் கொள்ளையடிக்கப்பட்ட இடம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:07 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து சிலா் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், வாகனம் மூலம் மணல் கொள்ளையடித்துச் செல்வது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடா்ந்து பாலாற்றில் சமூக விரோதிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதைப் பற்றி அதிகாரிகள் யாரும் கண்டுக் கொள்ளுவதில்லையெனவும், பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல் அறிந்து வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லாமல் இருக்க பள்ளம் தோண்டவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.